பிப்ரவரி 11:
கண்டுபிடிப்பு நாயகன்
தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த
தின சிறப்பு பகிர்வு...
தாமஸ் ஆல்வா எடிசன் இளம்
வயதில்
பள்ளிக்கு வெகு சில
நாட்களே போனார்.
ஒரு நாள்
வகுப்பை விட்டு வரும்
பொழுது அவரின்
பாக்கெட்டில்
ஒரு துண்டு சீட்டு இணைக்கப்பட்டு இருந்தது.
அதை அவரின்
அன்னை எடுத்து பார்த்தார்.
கண்களில் நீர்
முட்டிக்கொண்டது.
"டாமி படிக்க
லாயக்கில்லை !
வீட்டிலேயே வைத்துக்கொள்ளவும்!!
என்று அந்த கடிதம்
சொன்னது.
வீட்டில்
அன்னையே எடிசனுக்கு ஆசிரியை ஆனார்.
டிஸ்லெக்சியாவால்
பாதிக்கப்பட்டு பள்ளியில்
படிக்க லாயக்கில்லை என
துரத்தப்பட்ட எடிசன்
அன்னையின் அரவணைப்பில்
கல்வி கற்றார்.
உள்நாட்டு போர் நடந்த
பொழுது சுடசுட
செய்திகளை தொடர்வண்டியிலேயே அச்சிட்டு விற்றார் .ரயிலில்
ஆய்வு செய்து கொண்டிருந்த
பொழுது ஒரு பெட்டியில் தீ
பற்றிக்கொண்டதற்காக
ரயில்வே மாஸ்டரிடம்
அறை வாங்கி ஒரு
பக்கம் கேட்கும்
திறனை இழந்த எடிசன் தன்
ஓயாத உழைப்பால்
பல்வேறு கண்டுபிடிப்புகளை உருவாக்கினார்.
ஊமைப்படங்களை பேச
வைக்கும்
போனோக்ராஃபை ஆய்வகம்
தீப்பிடித்து எரிந்த
ஒரு வாரத்தில்
உருவாக்கி காட்டினார்.
குண்டு பல்பின் இழைக்காக
மலேசியா வரை ஆளை அனுப்பி பொருட்களை தேடிப்பார்த்தார்
். பத்தாயிரம்
முறை தேடியும்
பொருள்
சிக்கவில்லை ,"நான்
பத்தாயிரம்
முறை தோல்வியடைந்தேன்
என சொல்ல
மாட்டேன் ;பத்தாயிரம்
பொருட்களில்
இருந்து பல்பை ஒளிர
வைக்க முடியாது !என
கற்றுக்கொண்டேன்
என்றார்.எடிசன் இறுதியாக
பல்பை டங்ஸ்டனை கொண்டு ஒளிர
வைத்தார் .
அதை சாதித்த
பொழுது நள்ளிரவு .மனைவியிடம்
ஆர்வமாக காண்பித்த
பொழுது ,"நடுராத்திரியி
ல்
தூக்கத்தை கெடுத்துக்கிட்ட
ு ;கண்ணு கூசுது விளக்கை அணையுங்க !"
என்றார் .அவர் எப்படி மற்ற
கண்டுபிடிப்பாளர்களில்
இருந்து தனித்து நிற்கிறார்
என்றால் தான்
கண்டுபிடித்ததை வெற்றிகரமாக
அவர் சந்தைப்படுத்தினார்.
காய்கறி விற்பனை,செய்தித்தாள்
விற்றல் ,பள்ளியை விட்டு மூன்றே மாதத்தில்
வெளியேற்றம் என
விரக்தியான வாழ்வில் 1,093
காப்புரிமைகளை பெற்று இருந்தார்
என்பதற்கு பின்
எத்தகு உழைப்பு இருக்கும்
என உணர வேண்டும் .
வாழ்க்கையில் வலிகள்
மிகுந்திருந்த
பொழுது ஓயாத
உழைப்பை கொட்டிய அவர்
வெற்றியை ஓயாத
உழைப்பே தீர்மானிக்கிறது
என அடித்து சொன்னவர் .
ஒன்றுக்கும் உதவாத எடிசன்
எனப்பட்டவர்
மறைந்தார்;
அமெரிக்காவில்
விளக்குகள் சிலநிமிடம்
அணைந்தன .ரேடியோ கரகரத்தது,"
எடிசன்
வருவதற்கு முன் உலகம்
இப்படித்தான் இருந்தது !"
மீண்டும் விளக்குகள்
ஒளிர்ந்து ஊரே மின்னியது ரேடியோ சன்னமாக
சொன்னது ,"எடிசன்
பிறந்ததற்கு பின் உலகம்
இப்படித்தான்
இருந்தது !".அவரின்
அம்மா எனும் ஆசிரியரால்
வார்க்கப்பட்ட அந்த வெளிச்ச
நாயகன் போராட்ட இருட்டில்
மூழ்கி இருக்கும்.
Thursday, 12 February 2015
தாமஸ் ஆல்வா எடிசன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment