Wednesday, 16 January 2019

ஏர்முனைக்கு நேரிங்கே எதுவுமே இல்லை !

என்றும்நம்ம வாழ்விலே பஞ்சமே இல்லே!
                                                     - (ஏரிமுனை)
                                      
.
பூமியிலே மாரியெல்லாம்  சூரியனாலே -பயிர்

பூப்பதுவும் காய்ப்பதும் மாறி யினாலெ - நாம்

சேமமுற நாள்முழுதும் உழைப்ப னாலே -இந்தத்

தேசமெல்லாம் செழித்திடுது நம்ம கையாலே !
                                                                -(ஏர்முனை)

.
நெத்தி வேர்வை சிந்தினோமேமுத்துமுத்தாக -அது

நெல்மணியாய் விளைஞ்சிருக்கே கொத்துக்கொத்தாக

பக்குவமாய்  அறுத்துஅதைக் கட்டுக்கட்டாக -அடிச்சிப்

பதருநீக்கிக் குவிச்சு வைப்போம் முட்டுமுட்டாக!
                           

                                                             -(ஏர்முனை)

.
வளர்ந்துவிட்ட பருவப்பெண் போல்உனக்குவெட்கமா. தலை

வளைஞ்சு சும்மா பாக்கிறியே தரையின் பக்கமா -இது

வளர்த்துவிட்ட  தாய்க்குத்  தரும்ஆசை முத்தமா? -என்

மனைக்கு  வரக்காத் திருக்கும் நீஎன் சொத்தம்மா.!
                                               - (ஏர்முனை)

   _ திரைக்கவி திலகம் மருதகாசி

No comments:

Post a Comment