Thursday, 27 November 2014

லஞ்சம் வாங்கிய உதவி தொடக்கக்கல்வி அலுவலர் கைது!

கிராஜூவிட்டியை வழங்க ரூ.10
ஆயிரம் லஞ்சம் வாங்கிய
உதவி தொடக்க கல்வி அலுவலர்
கைது செய்யப்பட்டார்.
தேனி மாவட்டத்தை சேர்ந்த
சந்திரசேகர் என்பவர்.
திண்டுக்கல்லில்
தலைமை ஆசிரியராக
பணிபுரிந்து, கடந்த ஜூலை மாதம்
ஓய்வு பெற்றார். தனக்கு வர
வேண்டிய கிராஜூவிட்டி ரூ.9
லட்சத்தை பெறுவதற்காக
உதவி தொடக்க கல்வி அலுவலர்
கலைச்செல்வியை அணுகினார்.
இதற்கு ரூ.25 ஆயிரம் லஞ்சம்
கேட்டார். ரூ.20ஆயிரம் லஞ்சம் தர
ஒப்புக்கொண்ட சந்திரசேகர்,
இது குறித்து லஞ்ச
ஒழிப்பு போலீசாருக்கு தகவல்
தெரிவித்தார்.
இதனையடுத்து திண்டுக்கல்
மாவட்டம் வத்தலகுண்டு பஸ்
ஸ்டாண்டில் ரூ.10 ஆயிரம் லஞ்சம்
வாங்கிய கலைச்செல்வியை லஞ்ச
ஒழிப்புபோலீசார் கைது செய்தனர்.

No comments:

Post a Comment