Thursday, 4 December 2014

ஆளில்லா ரயில்வே கிராசிங் 5 குழந்தைகள் உயிரை காவு வாங்கியது

         இந்தியாவில் உயிர்களின் மதிப்பு மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது மிகவும் மலிவாகத்தான் இருக்கிறது. அதுவும் குழந்தைகளின் விஷயத்தில் கேட்கவே வேண்டியதில்லை.  கருக்கலைப்பில் தப்பிக்கும் குழந்தை கள்ளிப்பாலில் மரணமடைவதும் அதிலும் தப்பிக்கும் குழந்தை பேருந்து ஓட்டையிலும் ஆழ்துளை கிணறில் மரணிப்பதும் இங்கே சகஜம்!
      அந்த வகையில் உத்தரபிரதேசத்தில் பள்ளிப்பேருந்தில் சென்ற ஒரு பாவமும் அறியாத குழந்தைகள் ஐவர் ரயில்வே கிராசிங்கை பேருந்து கடந்த போது ரயில் மோதி பலியாகி உள்ளனர்.
       ஜூலை மாதத்தில் தெலுங்கானாவில் 18 குழந்தைகள் மரணமடைந்து இருந்த நிலையில் இது அடுத்த சம்பவம்.

No comments:

Post a Comment